f282caac-8f60-4240-8a12-6b3b8f626fe3_S_secvpf

மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம், விவசாயிகளுக்கு பயிர் கடன் முகாம்களை ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தவேண்டும் – வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

பெரம்பலூர்: வங்கியாளர்களுடனான மாதந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ்அஹமது தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
ஆண்டுதோறும், பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கியாளர்கள் ஒத்துழைப்போடு கல்விக்கடன் முகாம் மற்றும் பயிர் கடன் முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களின் மூலம் எண்ணற்ற மாணவ,மாணவிகள் உயர்க்கல்வி பெற உதவி வழங்கப்பட்டதோடு, பல விவாசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கல்விக்கடன் முகாம் மற்றும் பயிர் கடன் முகாம்கள் ஜீலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாத துவக்கத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த முகாம்களையும் சிறப்பாக நடத்த அனைவரும் தங்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார்.

அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி மூலம் தெரனி, புதுஆத்தூர், லாடபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு நபர்களுக்கு கோழிப்பண்னை அமைக்க வங்கி கடன் உதவியாக ரூ.27 லட்சத்து 60 ஆயிரத்து 112யை மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ்அஹமது வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கே.ராமசந்தின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!