தே.மு.தி.க.கட்சியின் தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் தமிழகம் தழுவிய சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இன்று பெரம்பலூர் வந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் சவுந்திரபண்டியன் ,பேரவை துணை தலைவர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கினர்கள்.
கூட்டதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
மாவட்டத்தில் தொழிற்சங்க அதிக உறுபினர்களை சேர்த்தல், மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்களை சந்தித்து தேமுதிக தொழிற்சங்கத்தை பலப்படுதுதல்.
போக்குவரத்து துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தை பலப்படுதுதல்.
மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களின் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தை பலப்படுதுதல்.
மாவடத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களின் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தை பலப்படுதுதல்.
மாவட்டத்த்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து உருபினர்களாக்கி அவர்களை நலவாரியத்தில் இணைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருவது.
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தின் உறுபினர்களை பழிவாங்கும் போக்கை இந்த அரசு கைவிட வேண்டும் என இக் கூட்டதில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளிடம் “ராஜீவ் ரஞ்சன்” பரிந்துரையின்படி சம்பளம் பெற்றுதருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து தொழிலாளர்களை ஏமாற்றிய ஏ.டி.பி., தொழிற்சங்கத்தை வன்மையாக கண்டிபதுடன் “ராஜீவ் ரஞ்சன்” அறிக்கைபடி தொழிளார்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும்,
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் மற்றும் அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இக்கூட்டதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டதில் மாநில மின்சார வாரிய மத்திய சங்க மாநில தலைவர் சாமிநாதன், சிவில் சப்ளை பிரிவு மத்திய சங்க மாநில தலைவர் சுதேஷ், சர்க்கரை பிரிவு மாநில தலைவர் பொன் .இளங்கோவன் , மாநில போக்குவரத்து தொழிற்சங்க துணை செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள் .
இக்கூட்டதில் பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேகர் தொழிற்சங்க தலைவர் ஜோதிலெட்சுமி, தொழிற்சங்க பொருளாளர் சீனிவாசன் , தொழிற்சங்க நிர்வாகிகள் சரவணன், சுரேஷ், வேல்முருகன், இளையராஜா, மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர் .