பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராசு (52)இ இவரது சகோதரர் சின்னண்ணன் (60). இவர்களுக்கு அருகருகே விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்கராசு கை.களத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்நிலையில் இன்று காலை போலீஸ் நிலையம் வந்த தங்கராசு போலீசார் வழக்கு பதியாததை அறிந்தார். இதனால் மனமுடைந்து போலீஸ் நிலையம் முன்பாக தனது கைப்பையில் மறைத்து கொண்டு வந்த பூச்சி மருந்தை எடுத்து திடீரென குடித்தார்.

உடனடியாக அருகிலிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!