பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம்எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா எம்.பி. மீதும் போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளை மோடி அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு மக்கள் நல கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் இரா.கிட்டு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநிலபொறுப்பாளர் வீர.செங்கோலன், வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளா; வேல்முருகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எ.கலையரசி, சிபிஎம் வட்டக்குழு எ.கணேசன், எஸ்.அகஸ்டின் வேப்பந்தட்டை சுபா.தங்கராசு வாலிபர் சங்கம் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.