online-appதமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 85 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 329 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு 21.2.2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்விற்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!