perambalur-collectorபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 206 மனுக்களை அளித்தனர்.

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்பின் கீழ் குழந்தைகள் குடும்ப சூழலில் வளர்வதையும் தொடர்ந்து கல்வி கற்பதையும் உறுதி செய்யும் வகையில் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரை இழந்தவர்களின் குழந்தைகள், சிறைதண்டனை அனுபவிப்பவர்களின் குழந்தைகள்,

எச்.ஐ.வி அல்லது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள குழந்தைகள் போன்ற குழந்தைகளுக்கு நிதி ஆதரவு தொகையாக ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000 (ரூபாய் இரண்டாயிரம்) வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 42 குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம் வீதம் 5 மாதங்களுக்கான உதவித்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 நபர்களுக்கு தலா ரூ.4,560 வீதம் ரூ.41,040 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் 1.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!