தேர்தல் அலுவலர்கள் பயணிக்கும் வாகனங்கள் எங்கெங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கபட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும், மாநில தேர;தல் ஆணையத்தின் மூலமும் இந்த வாகனங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைககப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணிணியில் மாவட்ட ஆட்சியர் பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுக்களின் வாகனங்கள் எங்கெங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பது குறித்து சோதித்தார்.